டாட்டூவினால் புற்றுநோய் ஏற்படும் : ஐரோப்பிய இரசாயன அமைப்பு எச்சரிக்கை!!

341

twin-lion

அழகுக்காக உடல்களில் குத்தப்படும் டாட்டூக்களினால் (பச்சை) அபாயகரமான புற்றுநோய்கள் ஏற்படும் என ஐரோப்பிய இரசாயன அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

டாட்டூ அலங்காரத்திற்குப் பயன்படுத்தப்படும் மைகளில் ஆபத்தை விளைவிக்கும் நச்சுப் பொருள் இருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக சிவப்பு நிறத்தைத் தருவிக்கப் பயன்படுத்தப்படும் மை மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடியது எனவும் ஐரோப்பிய இரசாயன அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனால் தோலில் ஏற்படக்கூடிய ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் பல ஆண்டுகளுக்கு நீடிக்கக்கூடும் என்பதுடன், அதிகபட்சமாக “டாட்டூ’ மைகளின் நச்சுத் தன்மையால் உயிரைக் குடிக்கும் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மைகளால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து ஏராளமான ஆய்வு முடிவுகளில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனிலிருந்து வெளியாகும் “சன்’ நாளிதழில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.