நைஜீரியாவில் 44 கிராமத்தினரை கழுத்தை அறுத்துக் கொன்ற இஸ்லாமிய தீவிரவாதிகள்!!

891

cut

வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள கிரமாத்திற்குள் புகுந்த இஸ்லாமிய தீவரிவாதிகள் அங்குள்ள 44 பேரை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர்.

நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டத்திட்டங்கள் படி ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்று கூறி போகோஹரம் தீவிரவாதிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்கள் அவ்வப்போது கிராமங்களில் புகுந்து மக்களை தாக்கி வருகின்றனர். அவர்கள் நேற்று அதிகாலையில் வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள தும்பா என்ற கிரமாத்திற்குள் புகுந்தனர்.

துப்பாக்கியால் சுட்டால் அங்குள்ள பாதுகாப்பு படையினருக்கு கேட்டுவிடும் என்பதால் அவர்கள் 44 கிராமத்தினரை கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர்.

இந்த தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களின் கண்களை அவர்கள் தோண்டி எடுத்துள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த 2010ம் ஆண்டில் இருந்து இதுவரை 1700க்கும் மேற்பட்ட மக்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.