சீகிரியா சுவர் ஓவியங்களின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்!!

338

Sigiriya Drawing

உலகபுகழ் பெற்ற சீகிரியா சுவர் ஓவியங்களின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருளியல் பாதுகாப்பு துறையில் பிரபல்யமான 6 பேர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சீகிரியா சுவர் ஓவியங்களின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராயப்படவுள்ளதோடு அவற்றிற்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பிலும் இந்த குழுவினரால் ஆராயப்படவுள்ளது.

இதனை அடுத்து ஓவியங்களை பாதுகாப்பதற்கான சிறந்த வழிமுறைகள் தொடர்பில் பரிந்துரைகள் பெற்றுக் கொள்ளப்படும் எனவும் தொல்பொருளியல் திணைக்களம் கூறியுள்ளது.