வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் தரம் 11ல் கல்விகற்கும் மாணவி செல்வி சங்கவி கனகரட்ணம் 09.07.2016 அன்று கல்வி அமைச்சு, இசுறுபாயவில் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கட்டுரையாக்கமும், இலக்கிய நயத்தலும் போட்டி பிரிவு (4) இல் பங்குபற்றி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அத்துடன் வட மாகாணமட்டத்தில் நடைபெற்ற ஆங்கிலமொழித்தின உறுப்பெழுத்து (Print Script Writing ) போட்டியில் தரம் 11ல் முதலிடம் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளார்.
இவர் சிங்கள மொழித்தின போட்டியிலும் தேசியமட்டத்தில் பங்குபற்றி வெற்றியீட்டியதும் குறிப்பிடத்தக்கது .
இவர் பாடசாலைக்கும் வவுனியா மாவட்டத்துக்கும் பெருமையீட்டித் தந்துள்ளமையால் பாடசாலைஅதிபர் திருமதி.க.பாக்கியநாதன் அவர்களும் பாடசாலைச் சமூகமும், வலயக்கல்விப் பணிப்பாளர்
திருமதி. S.அன்ரன் சோமராஜா அவர்களும் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
இவர் ந.கணகரட்ணம் (ஆசிரியர்), திருமதி, க. யசோதா (ஆசிரியர்) ஆகியோரின் புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.