5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் ஒக்டோபரில் வெளிவரும் : பரீட்சை ஆணையாளர்!!

351

grade 5

நடைபெற்று முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையின் முடிவுகளை எதிர்வரும் ஒக்டோபர் முதல்வாரத்தில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்று முடிந்த புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை நேற்று நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் எதுவிதமான முறைப்பாடுகளும் தமக்குக் கிடைக்கவில்லையென சுட்டிக்காட்டியுள்ள பரீட்சைகள் ஆணையாளர் குறித்த பரீட்சையானது வெற்றிகரமாக நிறைவடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு நேற்றைய தினம், நாடளாவிய ரீதியில் மூன்று இலட்சத்து 29 ஆயிரத்து 725 மாணவர்கள் தோற்றியிருந்ததுடன், அவர்களுக்கான பரீட்சை 2836 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.