வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று (30.07) கிரிடா சக்தி அபிவிருத்தி நிகழ்ச்சி வவுனியா மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் க.தனுராஜ் தலைமையில் நடைபெற்றது.
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் நடத்தப்படும் மேற்படி கிரிடா சக்தி விழையாட்டு அபிவிருத்தி நிகழ்ச்சிக்கு 15 வகையான விழையாட்டுக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி விளையாட்டுக்களுக்கு தகுதியான வீரர்களை இனங்காணும் தெரிவு நிகழ்வுகள் நேற்று நடைபெற்றது.
நிகழ்வில் 14 வயது தொடக்கம் 18 வயது வரையான விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டிருந்தனர். இவர்களில் தகுதியான விளையாட்டு வீரர்கள் இணைக்கப்பட்ட மாவட்ட விளையாட்டுக்குழு உருவாக்கப்பட்டு இக்குழுவிலுள்ள அனைத்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கும் ஊக்குவிப்பு கொடுப்பனவாக மாதாந்தம் 1440 ரூபா வழங்கப்படும் என மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் தனுராஜ் தெரிவித்தார்.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், பிரதேச செயலாளர் கா.உதயராசா, வட மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.