பள்ளிச் சிறுமிகளை அடைத்து வைத்து சீரழித்த கடாபி : பரபரப்புத் தகவல்கள்!!

360

kadabi

லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி மும்மத் அல் கடாபி பள்ளிச் சிறுமிகளை எப்படியெல்லாம் தனது காமப் பசிக்கு இரையாக்கினார் என்பது குறித்த புதிய புத்தகம் ஒன்றில் பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

அந்த சிறுமிகளை அவர் செக்ஸ் அடிமையாக வைத்திருந்தார் என்றும், தனது கோட்டைக்குக் கீழே அறை அமைத்து அவர்களை அடைத்து வைத்து பாலியல் ரீதியாக அவர்களை தனது இச்சைக்குப் பயன்படுத்தி வந்ததாகவும் Gaddafi´s Harem: The Story Of A Young Woman And The Abuses Of Power In Libya என்ற தலைப்பிலான அந்த நூல் கூறுகிறது.

பிரான்ஸைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் அன்னிக் கோஜீன் இதை எழுதியுள்ளார். இந்த நூல் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த நூலில் இடம் பெற்றுள்ள சில தகவல்கள்…

தனது கண்ணில் எந்த அழகான சிறுமி பட்டாலும் உடனே அவர்களைக் கடத்தி வருமாறு தனது பாதுகாவலர்களுக்கு உத்தரவிடுவாராம் கடாபி.
பின்னர் அந்த சிறுமிகள தனது கோட்டை போன்ற மாளிகையின் கீழே அமைக்கப்பட்டிருந்த ரகசிய அறைக்குக் கொண்டு போய் அடைக்க உத்தரவிடுவாராம்.

அங்கு வைத்துத்தான் பாலியல் ரீதியான சேஷ்டைகளை அவர் அரங்கேற்றுவாராம். இப்படி கடத்தி வரப்பட்டு சித்திரவதைக்குள்ளான ஒரு சிறுமிதான் சொரயா. இவருக்கு அப்போது 15 வயதாகும். ஐந்து வருடங்கள் இவர் சீரழிந்துள்ளார்.