ஆபாசப் படம் பார்த்த அண்ணனை தட்டிக்கேட்ட தங்கையை கொலை செய்த அண்ணன்!!

880

Girl Murder

கோவை மாவட்டம் மேட்டுபாளையம் அருகே கையடக்கதொலைபேசியில் ஆபாச படம் பார்த்த அண்ணனை, தங்கை தட்டிக்கேட்டதால் கோபமடைந்த அண்ணன் அவரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுபாளையத்தை அடுத்து மோத்தேபாளையத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (16) என்பவர் வாழை தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் குமார் என்பவர் தான் கொலை செய்ததாகக் கூறி ஊராட்சி கவுன்சிலரிடம் சரணடைந்தார்.

சரணடைந்த தினேஷ் குமார் கொலை செய்யப்பட்ட ஜெயஸ்ரீக்கு அண்ணன் முறையாகும். பொலிஸாரின் விசாரணையில் தினேஷ் குமார் கூறியபோது, கடந்த 22 ஆம் திகதி வாழை தோட்டத்தில் கையடக்கதொலைபேசியில் ஆபாச படம் பார்த்து கொண்டு இருந்தேன். அப்போது அந்த வழியில் சென்ற ஜெயஸ்ரீ என்னை கண்டதும், இதுகுறித்து என் பெற்றோரிடம் கூறுகிறேன் என்றார். நான் அவரை கண்டித்ததோடு, அவரை உறவுக்கு அழைத்தேன்.

உடனே அவர் ஆபாசப் படம் பார்த்ததே தவறு, அதோடு என்னை அழைப்பது இன்னும் அசிங்கமானது. இதை கட்டாயம் உன் பெற்றோரிடம் கூறுகிறேன் என்றார். நான் எங்கே வீட்டில் சொல்லிவிடுவாரோ என்ற அச்சத்தில் அவரை தாக்கி, கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டேன், என்று கூறினார். பொலிஸார் ஜெயஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.