இன்று முதல் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு!!

612

Bus

தனியார் மற்றும் அரச பேருந்துக் கட்டணங்களை இன்று முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வருடாந்த பேருந்து கட்டணத் திருத்தத்திற்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு கூறியுள்ளது.

இதற்கமைய இம்முறை பேருந்துக் கட்டணங்கள் 6% அதிகரிக்கப்படவுள்ளன.

வருடாந்த பேருந்துக் கட்டண அதிகரிப்பு ஜூலை மாதம் முதலாம் திகதி இடம்பெறும். எனினும் இம்முறை இடம்பெற்ற சர்ச்சை காரணமாக ஆகஸ்ட் மாதம் வரை இந்த நடவடிக்கை தாமதமடைந்திருந்தது.

இதேவேளை, அதிவேக வீதியில் பயணிக்கும் பேருந்துகளுக்கான கட்டணங்களும் இதன்படி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனவே, காலி – கண்டிக்கு இடையிலான பேருந்துகளுக்கான புதிய கட்டணங்கள் 390 ரூபாவாகவும், கண்டி – மாத்தறைக்கான பேருந்துகளின் புதிய கட்டணம் 470 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடுவளை மற்றும் மாத்தறைக்கு இடையிலான பேருந்துகளுக்கு புதிய கட்டணமாக 490 ரூபாய் அறிவிடப்படவுள்ளது.