தனது பிறந்ததினத்தை போரினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுடன் கொண்டாடிய ஆதித்யன்!!

775

 
ஜேர்மனியில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் சி.ஆதித்தியன் தனது 10வது பிறந்தநாளை முல்லைதீவு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களின் பிள்ளைகள் இருவருக்கு ஈருளிகளை வழங்கியதன் மூலம் கொண்டாடியுள்ளார்.

முல்லைதீவு அலம்பிலை சேர்ந்த ஜன்சிகா தனது தந்தை தாய் இருவரையும் இழந்த நிலையில் உறவினருடன் இருந்து கல்வி கற்பதற்கு சிரமப்பட்ட வேளையில் இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது.

மற்றும் முள்ளியவளையைச் சேர்ந்த சஞ்சியா தனது தந்தை சகோதாரி ஆகியோர் யுத்தத்தில் காணமல் போய் உள்ள நிலையில் தனது தாய் மற்றைய சகோதரிகளுடன் வாழ்ந்து வரும் இவர் பாடசாலைக்கு செல்வதற்கு சிரமப்பட்டு வந்த நிலையில் இவருக்கு இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது.

சி.ஆதித்தியன் அவர்களின் விருப்பத்திற்க்கு இணங்க ஜேர்மனி உதவும் இதயங்கள் ஊடாக வழங்கப்பட்ட இவ் உதவியினை தாயக செய்பாட்டாளர் ச.சஜீவன் நேரில் சென்று வழங்கியுள்ளார்.

சி.ஆதித்தியன் பல்கலையும் கற்று பல்லான்டு காலம் வாழ நாங்களும் வாழ்த்துவோம். இதே போன்று புலம் பெயர் உறவுகளும் தொடர்ந்து தாயக மக்களுக்கு உதவி வழங்க முன்வர வேண்டும்.

1 2 3 4 5