மன்னார் பாழடைந்த கிணற்றில் இருந்து மனித எச்சங்கள் மீட்பு!!

1412

mannar

மன்னார் – திருக்கேதீஸ்வரம் பகுதியிலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் சில உறுப்புக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த கிணறு தோண்டப்பட்ட போதே இவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் 96 மனித எச்சங்கள் திருக்கேதீஸ்வரம் பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டன. அந்தப் பகுதிக்கு அருகிலேயே இந்த பாழடைந்த கிணறும் இருந்துள்ளது

மேலும், குறித்த கிணற்றைத் தோண்டும் பணிகள் இன்றும் தொடரவுள்ளன.