குளிர்பான போத்தல்களில் அடங்கியுள்ள சீனியின் அளவை குறிக்கும் வர்ண குறியீடுகள் வெளியிடும் உத்தரவை மீறும் வர்த்தகர்களை தேடி இன்று முதல் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் கூறியுள்ளது.
1986ம் ஆண்டு 26ம் இலக்க உணவு சட்டத்தின் கீழ் குளிர்பான போத்தல்களில் அடங்கியுள்ள சீனியின் அளவை குறிக்கும் வர்ண குறியீடுகள் வெளியிடும் உத்தரவு நேற்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
குறித்த உத்தரவை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக குளிர்பான தயாரிப்பாளர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் கடந்த தினங்களில் அறிவுறுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
அதன்படி அந்த உத்தரவை மீறும் வர்த்தகர்களை தேடி ற்றிவளைப்புக்கள் மேற்கொள்ள சுகாதார அமைச்சின் ஊடாக நாடு பூராகவும் உள்ள பொது சுகாதார பரிசோதகர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.






