சிறையில் இலங்கை அகதிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம்!!

295

Sri-Lankan-Tami20987

புழல் சிறையில் அடைக்கப்பட்ட மூன்று இலங்கை அகதிகள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்கள். பூந்தமல்லி அடுத்த கரையான் சாவடியில் சிறப்பு அகதிகள் முகாம் உள்ளது. இதில் அடைக்கப்பட்டிருந்த சந்திரகுமார், கிரிஷ்ணமூர்த்தி, மகேஸ்வரன் ஆகிய 3 இலங்கை தமிழ் அகதிகள் அங்கே தொடர் உண்ணாவிரதம் இருந்தனர்.

திறந்தவெளி முகாமிற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அந்த 3 பேரும் கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார்கள். அவர்களை பொலிஸார் கைது செய்தனர். தற்கொலைக்கு முயன்றதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பூந்தமல்லி ஜூடிசியல் நீதவான் வேல்ராஜ், முன்பு 3 பேரையும் ஆஜர்படுத்தினார்கள்.

அவர்களை காவலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார். இதையடுத்து 3 அகதிகளும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். சிறையிலும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்கள். நேற்று காலை முதல் அங்கே சந்திர குமார், கிரிஷ்ணமூர்த்தி, மகேஸ்வரன் மூவரும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

உரிய ஆவணங்கள் இன்றி கடல் வழியாக தமிழகத்துக்கு வந்த இலங்கை தமிழ் அகதிகள் இவர்கள் என்பாதும் அதனால் பொலிசாரால் பிடிக்கப்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.