சிரியாவில் ரஷ்ய இராணுவ ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது : ஐவர் உயிரிழப்பு!!

301

russia

சிரியாவில் ரஷ்ய இராணுவ ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்ய இராணுவத்திற்கு சொந்தமான MI8 போக்குவரத்து ஹெலிகொப்டர், சிரியாவின் அலெப்போ நகரில் நிவாரணப் பொருட்களை விநியோகித்துவிட்டு திங்கட்கிழமை திரும்பிக் கொண்டிருந்த போது இத்லிப் மாகாணத்தில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

அதிலிருந்த 3 பணியாளர்களும், இரு இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் ஹெலிகொப்டர் வீழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக மிகவும் கவனமுடன் செயற்பட்டு குறித்த 5 பேரும் உயிர்த் தியாகம் செய்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் குறிப்பிட்டுள்ளார்.