எங்களை தோற்கடிப்பது கடினம் : குக் எச்சரிக்கை!!

354

Alastair Cook

ஆஷஸ் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றுள்ளது. இதன்மூலம், எங்களை தோற்கடிப்பது கடினம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் குக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது.

இந்தப் போட்டியின் ஒரு நாள் ஆட்டம் மழையால் பாதிப்படைந்தது. எனினும் கடைசி நாளில் 4 ஓவரில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான நிலையில் இங்கிலாந்து இருந்தது. ஆனால், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 2013ம் ஆண்டுக்கான ஆஷஸ் கோப்பை இங்கிலாந்து அணிக்கு வழங்கப்பட்டது. பின்னர் இந்த வெற்றி குறித்து குக் கூறியது:

ஆஷஸ் தொடர் தொடங்கும் முன், இங்கிலாந்து அணி குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. சொந்த நாட்டில் நடக்கும் போட்டி என்பதால் இங்கிலாந்து அணிக்கே நெருக்கடி அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், எங்கள் அணி போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிகளைப் பெற்றது.

வேண்டியபோது ஓட்டங்களையும், விக்கெட்டையும் எங்கள் வீரர்கள் கைப்பற்றினர். இதன்மூலம் தன்னைத் தோற்கடிப்பது கடினம் என்ற நிலையை எங்கள் அணி எட்டியுள்ளது. அடுத்த ஆஷஸ் தொடர் அவுஸ்திரேலியாவில் வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது.

அவுஸ்திரேலியாவில் அந்நாட்டு அணியினர் பலம் வாய்ந்தவர்களாக இருப்பர். ஆனால், அதனை சமாளிக்கும் வகையில் எங்கள் அணி உள்ளது என்று தெரிவித்தார். கடைசியாக அவுஸ்திரேலிய அணி விளையாடிய 9 ஆட்டங்களில் 7இல் தோல்வியைத் தழுவியுள்ளது. 2 போட்டிகளை சமநிலை செய்துள்ளது.

டெஸ்டில் ஜாம்பவானாக விளங்கிய அவுஸ்திரேலிய அணி தற்போது தடுமாறி வருகிறது. ஆஷஸ் தொடரை இழந்து விட்டபோதும், எங்கள் அணியின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அணித் தலைவர் கிளார்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இத்தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு எங்களுக்கு இருந்தது. ஆனால், மழையினால் அது மாறிப்போனது. 5வது டெஸ்டில் ஷேன் வட்சன், ஸ்டீவன் ஸ்மித், கிறிஸ் ரோஜர்ஸ் உள்ளிட்ட வீரர்கள் போர்முக்குத் திரும்பினர்.

ஆஷஸ் தொடரின் கடைசி 3 போட்டிகளில் எங்கள் அணி சிறப்பாகச் செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.