வவுனியா தவசிகுளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பால விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா நேற்றுமுன்தினம் 01.08.2016 திங்கட்கிழமையன்று இடம்பெற்றது.
மேற்படி தேர்த்திருவிழாவில் நூறுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதுடன் காவடி,கற்பூரசட்டி மற்றும் அடியடித்தல், அங்கபிரதட்சினம் என்பவற்றை செய்து பக்தர்கள் தங்களது நேர்த்திகடன்களை நிறைவு செய்திருந்தனர்.