பொரலஸ்கமுவவில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு!!

939

Shoot

பொரலஸ்கமுவ, கட்டுவாவ விகாரைக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்றில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 30 வயதுடைய ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.