காதலிக்காக தொடர்ந்து 10 நாட்கள் விமான நிலையத்தில் காத்திருந்த காதலன்!!

436

11

நெதர்லாந்தைச் சேந்த நபர் ஒருவர் தனது காதலிக்காக தொடர்ந்து 10 நாட்கள் விமான நிலையத்தில் காத்திருந்த நெகிழ்ச்சியான சம்பவம் சீனாவில் நடைபெற்றுள்ளது.

நெதர்லாந்தை சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் பீட்டர் (41),சீனாவை சேர்ந்த ஜாங்(26) என்பவருக்கும் பேஸ்புக் பக்கத்தின் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.
இது பின்னடைவில் இருவருக்கும் காதலாக மாறியுள்ளது. பேஸ்புக்கில் பேசிவந்த அலெக்ஸ்சாண்டர் தனது காதலியை காண முடிவு செய்து சீனா விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

மேலும் தான் சீனா விமான நிலையத்திற்கு வருவதாக ஜாங்கிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ஜாங் கோ அவரை காண விமான நிலையத்திற்கு வரவில்லை.

அலெக்ஸாண்டர் தன் காதலி தன்னை காண வருவாள் என்று தொடர்ந்து விமான நிலையத்தில் தங்கி வந்துள்ளார். ஆனால் அவரது உடல் நிலையோ அவருக்கு ஒத்துழைப்பு தரவில்லை.

அலெக்ஸாண்டர் உடல் நிலை மோசமாவதை அறிந்த விமான நிலைய உழியர்கள், அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர்.

இது குறித்து அலெக்ஸாண்டர் காதலி ஜாங் கூறியதாவது, அலெக்ஸாண்டர் சீனா வருவதாகவும், அதற்கான விமானத்தின் பயணசீட்டை தனக்கு புகைப்படம் எடுத்து அனுப்பினார். ஆனால் அதன் பின் தன்னை தொடர்பு கொள்ளவில்லை.

மேலும் அறுவை சிகிச்சைக்காக வேறொரு இடத்தில் இருப்பதாகவும், இதன் காரணமாக தன் தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

அலெக்ஸாண்டர் தன் காதலி தன்னை விரைவில் வந்து சந்திப்பாள் என்ற நம்பிக்கையுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

12 13