மீண்டும் அணியில் இடம்பிடிக்க போராடுவது ஏன் : யுவராஜ் சிங்!!

346

yuvaraj

இந்திய அணியில் தொடர்ந்து ஓரங்கப்படும் நிலையிலும் மீண்டும் அணியில் இடம்பிடிக்க போராடுவது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் யுவராஜ் சிங்.

இந்திய அணியின் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங் கடந்த 2011ம் ஆண்டில் நடந்த உலக கிண்ண போட்டியில் தொடர் நாயகன் விருதினை வென்றார்.

இதன் பின் ஏற்பட்ட நுரையீரல் புற்றுநோயில் இருந்து மீண்டவர் 2012 T-20 உலக கிண்ண தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார். தற்போது போம் இல்லாததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் யுவராஜ் சிங் கூறுகையில் கடந்த ஒரு ஆண்டாக அணியில் இடம் கிடைக்காதது கடினமாக இருந்தது. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய ஏற்றத் தாழ்வுகளை சந்தித்துள்ளேன்.

உலக கிண்ண(2011) தொடருக்கு முன் ஏற்பட்ட காயம் அதன்பின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டது மீண்டும் அணியில் இடம் பிடித்தது தற்போது அணியில் இடம் கிடைக்காமல் தவிப்பது என எல்லாமே சோதனை தான்.

இருப்பினும் கிரிக்கெட் மீதுள்ள ஆர்வம் தான் மீண்டும் அணியில் இடம் பிடிக்க தூண்டியது. இதற்காக கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.

அடுத்த மாதம் நடக்கவுள்ள சலஞ்சர் கிண்ணத் தொடரில் பங்கேற்க உள்ளேன். அதற்கு முன் சில உள்ளூர் போட்டிகளில் விளையாட உள்ளேன்.

அதன்பின் ஒக்டோபரில் துலீப் கிண்ண தொடரில் பங்கேற்க உள்ளேன், வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவேன். அதன்பின் ரஞ்சி கிண்ண தொடரில் பங்கேற்க திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.