சற்றுமுன் மதவாச்சி புகையிரத நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்!!

546

 
சற்றுமுன் மதவாச்சி புகையிரத நிலையத்தை முற்றுகையிட்டு தண்டவாளங்களின் குறுக்கே நின்று புகையிரதக் காப்பாளர்கள் திடீரென மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகின்றது.

வடமாகாண புகையிரதக் காப்பாளர் சங்கத் தலைவர், செயளாளர் மற்றும் காப்பாளர்களுடன் தென்மாகாண புகையிரதக் காப்பாளர் சங்கத் தலைவர், செயளாளர் மற்றும் காப்பாளர்களும் இணைந்து இவ் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்

நிரந்தர நியமனம் கோரியும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாக்குறுதி அளித்த சம்பள உயர்வு இன்னமும் அதிகரிக்கவில்லை என்றும் மேலதிக பணியாளர்களை பணிக்கு அமர்த்தும் போது அந்தந்தக் கிராமங்களிலேயே பணியாளர்களை அமர்த்துமாறும் கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

1 news (1) news (3) news (5) news (6) news (7) news (8) news (9)