மோட்டார் சைக்கிளொன்று புகையிரதத்துடன் மோதியதில் மூவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குருநாகல்-கனேவத்த பாதுகாப்பற்ற புகையிரத கடவையிலேயே இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் என்றும், அவர்களது சடலம் கனேவத்த புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெல்லவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை பல கோரிக்கைளை முன்வைத்து பாதுகாப்பற்ற புகையிரத கடவை காவலர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பணி நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.