ஒருதலைக்காதலால் பாடசாலை மாணவி பரிதாபமாகப் பலி!!

605

Dead

விழுப்புரம் மாவட்டத்தில் ஒருதலைக்காதல் விவகாரத்தால் மாணவி நவீனா பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே உள்ள வா.பாளையம் பகுதியைச் சேர்ந்த அங்கமுத்து என்பவரது மகள் நவீனா(17). பிளஸ்-2 படித்து வந்த இவர் தினமும் பள்ளிக்கு மினி பஸ்சில் சென்று வந்தார்.

குறித்த பேருந்து ஓட்டுநரான செந்தில்(30) என்பவர், நவீனாவை ஒருதலையாக காதலித்தார். இவரது காதலை, அந்த மாணவி ஏற்க மறுத்ததுடன் தனது பெற்றோரிடமும் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

பெற்றோரும் அவனை பலமுறை எச்சரித்தும், அந்நபர் திருந்தியபாடில்லை, உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்று தினந்தோறும் சண்டையிட்டுள்ளான்.

இந்நிலையில் சம்பவத்தன்று, மாணவியின் பெற்றோர் வேலைக்கு சென்றபின்னர், மாணவியின் வீட்டிற்கு பெட்ரோலுடன் சென்ற செந்தில், அங்கு கதவை பூட்டிவிட்டு, என்னை காதலிக்க மறுத்த நீ உயிரோடு இருக்ககூடாது என கூறிக்கொண்டு, தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீயை வைத்துக்கொண்டார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி சுதாரித்துக்கொண்டு, அங்கிருந்து தப்பிப்பதற்குள் செந்தில் மாணவியை கட்டிப்பிடித்துள்ளார், இதில் மாணவியின் உடலிலும் தீப்பிடித்ததில், அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செந்தில் இறந்தார். மாணவியின் உடல்நிலை மிகவும் மோசமானதால் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

சிகிச்சைகள் நடந்து வந்த நிலையில் நான்கு நாட்கள் கழித்து நவீனா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார், ஒருதலைக்காதல் விவகாரத்தால் நவீனா உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.