சுவாதியின் 14 சிம் காட்கள் மற்றும் மடிக்கணணி எங்கே : வழக்கறிஞர் கேள்வி!!

869

Swathi

படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் சுவாதி பயன்படுத்திய 14 சிம் கார்டுகள் மற்றும் மடிக்கணணி குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என கைது செய்யப்பட்ட ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ராம்குமார் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் நேற்று சென்னையில் நிருபர்களுடன் பேசினார். அப்போது, சுவாதி கொலை வழக்கை விரைந்து முடிக்க நீதித் துறையையும் காவல்துறை துணைக்கு அழைப்பதாக ராமராஜ் குற்றம்சாட்டினார்.

மேலும் ராம்குமார் தரப்பு ஆதாரங்களை தாக்கல் செய்ய தான் தேவையான தகவல்களை திரட்டி வருவதாகவும் வழக்கறிஞர் ராமராஜ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சுவாதியிடம் 14 சிம்கார்டுகள் இருந்ததாக ராம்குமாரின் வழக்கறிஞர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.