விருந்திற்காக மானைக் கொன்று இறைச்சியாக்கியவர் கைது!!

265

Deer

சூரியவௌ-விகாரகர பிரதேசத்தில் திருமண நிகழ்வின் விருந்தொன்றிட்காக கொண்டுவரப்பட்ட மான் இறைச்சி 25 கிலோவை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் நேற்று கைப்பற்றியுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய வீடொன்றை சுற்றிவளைத்த போதே குறித்த வீட்டின் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து மான் இறைச்சியை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை துப்பாக்கியால் சுட்டே மானினைக் கொன்று இறைச்சியை எடுத்துள்ளதாக வனஜீவராசிகள் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.