பெருந்தொகை வௌிநாட்டு நாணயங்களுடன் சிங்கப்பூர் செல்ல முற்பட்ட இருவர் கைது!!

285

Airport

சட்டவிரோதமாக ஒரு தொகை வௌிநாட்டு நாணயங்களை கடத்த முற்பட்டதாக கூறப்படும் இருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை சிங்கப்பூர் நோக்கி செல்லவிருந்த விமானத்தில் இவர்கள் புறப்படத் தயாராக இருந்ததாக, விமான நிலையத்தின் பிரதி சுங்கப் பணிப்பாளர் பராகிரம பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட வௌிநாட்டு நாணயங்களின் பெறுமதி மூன்றரைக் கோடி ரூபாவுக்கும் அதிகம் என கூறப்படுகின்றது.

இதேவேளை சந்தேகநபர்கள் கொழும்பைச் சேர்ந்த 35 மற்றும் 49 வயதான இருவராகும்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சுங்கப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.