வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று (04.08.2016) காலை மருத்துவப்பீட மாணவ செயற்பாட்டுக்குழு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எற்பாடு செய்த கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.
தனியார் பல்கலைக்கழகம், தனியார் பாடசாலை, தனியார் வைத்தியசாலை மருத்துவ வியாபாரிகளுக்கு ஏற்ற விதத்தில் கல்வி, சுகாதாரத்தை நடாத்திக் கொள்கின்றனர். பாடசாலையில் அறவிடப்படும் பணம் குறைந்ததா? வைத்தியசாலைகளில் மருந்திற்கான வரிசை குறைந்ததா? வரி இன்னும் கூடியது இவை அனைத்தும் எமக்குத் தேவையான விதத்தில் நடைபெறவில்லை என்று தெரிவித்து ஒரு இலட்சம் பேரிடத்தில் கையெழுத்து பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.