70 வயது கணவரை தேநீர் கோப்பையால் அடித்துக் கொன்ற மனைவி!

343

MURDER

70 வயதான தனது கணவர் இன்னொரு பெண்ணுடன் அதுவும் தான் வெறுத்து ஒதுக்கிய பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் கோபமடைந்த அவரது 61 வயது மனைவி தனது கணவரை தேநீர் கோப்பையால் அடித்தே கொன்று விட்டார். ஜப்பானில்தான் இந்த பயங்கரம் நடந்துள்ளது.

டோக்கியோவின் தென் மேற்கில் இந்தத் தம்பதியினர் வசித்து வந்தனர். அந்த தாத்தாவுக்கு வயது 70 ஆகிறது. பெயர் யசுவோ ஹிரோஷே. இவரது மனைவி பெயர் எமிகோ ஹிரோஷே.

அவருக்கு 61 வயதாகிறது. இந்த நிலையில் தனக்குப் பிடிக்காத ஒரு பெண்ணுடன் கணவருக்குத் தொடர்பு இருப்பது எமிகோவுக்குத் தெரிய வந்தது. இதனால் அவர் கடும் கோபமடைந்தார். வீட்டில் இருந்த தேநீர் கோப்பையை எடுத்து கணவரை சரமாரியாக அடித்தார்.

பத்துக்கும் மேற்பட்ட முறை தலையில் அடித்ததால் படுகாயமடைந்த யசுவோ, உயிரிழந்து போனார். தகவல் அறிந்து விரைந்து வந்த பொலீஸார் எமிகோவைக் கைது செய்தனர்.