மூடப்பட்ட துபாய் விமானநிலையம்: ரத்து செய்யப்பட்ட விமானங்கள்!!

273

maxresdefault
திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் போயிங் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து துபாய் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் துபாய் செல்லும் பல்வேறு நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து துபாய் புறப்படும் 4 விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டது.

இதேபோல் துபாயில் இருந்து பிற நாடுகளுக்கு புறப்படும் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னை வரவேண்டிய இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டது.

இந்த விமானம் காலை 7 மணிக்கு துபாய்க்கு புறப்பட்டு செல்லும், இந்த சேவையும் ரத்து செய்யப்பட்டது. துபாய் விமான விபத்து காரணமாக விமானங்கள் வருவதிலும் தாமதம் ஏற்பட்டது. ஏர்இந்தியா விமானம், வளைகுடா நாடுகளான ரியாத், சவுதி, குவைத், சார்ஜா ஆகிய விமான சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னைக்கு அதிகாலை 3.45 மணிக்கு, லண்டனில் இருந்து வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் காலை 8.30க்கு வந்தது. 5 மணிக்கு லண்டனுக்கு புறப்பட வேண்டிய இந்த விமானம் தாமதமாக 10.30 மணிக்கு புறப்பட்டது. மேலும், நேற்று இரவு 8.30 மணிக்கு வரவேண்டிய எமிரேட்ஸ் விமானம் 5 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது. அதிகாலை 2.30 மணிக்கு வரவேண்டிய மற்றொரு விமானம் காலை 8 மணிக்கு வந்தது.