தனது 4 பிள்ளைகளையும் பௌத்த பிக்குகளாக்கிய தமிழரான தந்தை!!

629

Pikku

பொல­ன­றுவை – திம்­பு­லா­க­லவை சேர்ந்த தமிழரான தந்­தை­யொ­ருவர் தனது நான்கு பிள்ளைகளையும் பிக்கு சாச­னத்தில் இணைத்துள்ளார்.

இந்­நான்கு பிள்­ளை­களுள் ஆண் பிள்­ளைகள் மூவரும் திம்­பு­லா­கல துற­விகள் மடத்­திலும், பெண் பிள்ளை பொல­ன­று­வை அச­ரன சரண சுகத விகா­ரை­யிலும் துற­வறம் பூண்­டுள்­ளனர்.

ஆண்­பிள்­ளைகள் மூவரும் 9, 14, 16 ஆகிய வய­து­டை­ய­வர்கள் எனவும் பெண் பிள்ளை 11 வயதானவர் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இவர்கள் நால்­வரும் தற்­போது பிரி­வெனா கல்வியினை கற்று வரு­கின்­றனர்.

சுமார் 2 வரு­டங்­க­ளுக்கு முன்­பாக பணிப்­பெண்­ணாக சவூதி சென்ற தனது மனைவி தொடர்பில் கடந்த ஆறு மாதங்­க­ளாக எந்­த­வித தக­வல்­களும் கிடைக்­க­ வில்லை என்றும், பிள்­ளை­களை கவனித்துக் கொள்­வ­தற்கு யாரு­மில்­லாத கார­ணத்­தி­னாலும் அவர்­களை துற­வ­றத்தில் இணைத்துவிட்­ட­தாக அவர்­களின் தந்­தை­யான சித்­தி­ரவேல் சுந்­த­ர­லிங்கம் தெரி­வித்­துள்ளார்.

56 வய­தான சித்­தி­ரவேல் சுந்­த­ர­லிங்கம், வலது கை பூரண இய­லா­மை­யாலும், கண்­பார்வை குறைபாட்­டி­னாலும் பாதிக்­கப்­பட்­டுள்­ளதால் தற்­போது துற­வறம் பூண்­டுள்ள தமது பிள்­ளை­க­ளுடன் திம்­பு­லா­கல மடா­ல­யத்தில் வசித்து வரு­கின்றார்.

இவர் வெலி­கந்த, செவ­ண­பி­டிய, கர­பொல கிரா­மத்தில் வசித்து வந்த வேளையில் குடும்ப பொருளா­தார சிக்கல் கார­ண­மாக காணித் தரகர் ஒரு­வரின் வார்த்­தைக்கு அமைய தாம் வசித்து வந்த நிலத்­தினை 1 இலட்­சத்து 10 ஆயிரம் ரூபா­வுக்கு அடகு வைத்து விட்டு தனது மனை­வியை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்­த­தாக தெரி­வித்­து­ள்ளார்.

கிழக்கு பல்­க­லைக்­க­ழகத்தில் விஞ்­ஞானம் தொடர்­பான ஒரு வருட கற்கை நெறியை பூர்த்தி செய்துள்ள சுந்­த­ர­லிங்கம், 11 வரு­டங்­க­ளாக செங்­க­லடி மாவட்ட செய­ல­கத்தில் காரி­யா­லய உதவியா­ள­ராக கட­மை­யாற்றி வந்­தி­ருந்த நிலையில் வரு­மானம் போதா­மை­யினால் பொலனறுவை­யி­லுள்ள அரிசி ஆலை­யொன்றில் கட­மை­யாற்றி வந்தவர்.

தற்போது தனது இயலாமையின் காரணமாக மடத்தில் வசித்து வரும் இவரை தனது (ஆண்) பிள்ளைகள் மூவரும் துறவறம் பேணிவந்தாலும் சிறப்பாக கவனித்துக் கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.