திசை திரும்புகிறதா சுவாதி கொலை வழக்கு : பிலாலிடம் மீண்டும் விசாரணை!!

336

Bilal

சுவாதி கொலை தொடர்பாக அவரது நண்பர் முகமது பிலாலிடம் அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தியுள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக நேற்று இந்த விசாரணை நடைபெற்றுள்ளது. முகமது பிலாலிடம் ஏற்கனவே பலமுறை பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், நேற்று மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சுவாதி கொலை தொடர்பாக பல்வேறு கேள்விகளை விசாரணை அதிகாரிகள் பிலாலிடம் கேட்டுள்ளனர்.

சுவாதி கொலை வழக்கில் ராம்குமாரே குற்றவாளி என்று பொலிசார் ஆரம்பம் முதலே தெரிவித்துவந்த நிலையில், முகமது பிலாலிடம் நடைபெற்றுவரும் விசாரணை தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

“சுவாதியை எப்படி தெரியும்?” என்பது போன்ற ஊடகங்களின் கேள்விகளுக்கு பிலால் பதிலளிக்க மறுத்திருந்த நிலையில், அவரிடம் விசாரணை நடத்தப்படுவது இவ்வழக்கில் பல்வேறு தரப்பினராலும் கூர்ந்து நோக்கப்பட்டு வருகிறது.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, கடந்த ஜூன் 24ம் திகதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.