வீட்டில் வளர்த்த நாகப் பாம்பு ஒன்று தீண்டி சுற்றாடல் ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆய்வு நோக்கத்திற்காக வீட்டில் வளர்த்து வந்த நாகப் பாம்பு ஒன்றே இவ்வாறு தீண்டியுள்ளது.
காலியைச் சேர்ந்த 47 வதான அமல் விஜேசேகர என்பவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். காலி கலேகானே பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் இந்த நபரை வீட்டு வாயிட் கதவு அருகாமையில் இறந்து கிடந்த நிலையில் உறவினர்கள் மீட்டுள்ளனர்.
இலங்கைக்கே உரிய உயிரினங்கள் தொடர்பில் ஆய்வு நடத்தி வரும் ஆய்வுக் குழுவொன்றின் அங்கத்தினராக இவர் கடமையாற்றி வந்தார்.
பிரதேசத்தில் பல்வேறு வீடுகளுக்கு வரும் பாம்பு இனங்களை பிடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்று ஆய்வு செய்து வந்துள்ளார்.
தங்கியிருந்த வீட்டின் ஒரு பகுதியில் இந்த பாம்புகள் வளர்க்கப்பட்டுள்ளன. இந்த பாம்பு வகைகளில் இரண்டு பெரிய நாகப் பாம்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாம்பு அவரைக் கொத்தியதன் பின்னர் வீட்டுக்கு வெளியேற சென்றிருக்கலாம் எனவும் அதன் போது நுழைவாயிலுக்கு அருகாமையில் வீழ்ந்து இறக்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
பாம்பு விசத்தினால் இந்த மரணம் ஏற்பட்டதாக கராபிட்டிய வைத்தியசாலையில் நடத்திய பிரதேப் பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.