அனுமன் பாலத்தை குண்டுவைத்து தகர்த்த தீவிரவாதத் தலைவர்!!

323

rameswaram2
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நிர்மாணிக்கப்படவிருக்கும் அனுமன் பாலம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நிர்மாணிக்கப்படவிருக்கும் பாலத்தினை உதய கம்மன்பில தனது வாயினால் குண்டுவைத்து தகர்த்தியுள்ளார். இதனால் இவர் ஒரு தீவிரவாத தலைவர் என இராஜாங்க அமைச்சர் கூறினார்.

மேலும், இது போன்ற முட்டாள்களின் அறிவற்ற பதில்களுக்கு மக்கள் செவிசாய்க்கக் கூடாது. அனுமன் பாலம் நிர்மாணிப்பது பற்றி பேச்சுவார்த்தை மட்டுமே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது, ஆனால் அதற்கு முன்னரே பாலம் தகர்க்கப்பட்டது என சுட்டிக்காட்டினார்.

மேலும், ஸ்ரீ.சு.கட்சியின் தலைமை அலுவலகம் ஒரு விபச்சார விடுதி என்று கூறுவதற்கு கம்மன்பிலவுக்கு எந்த விதமான தகுதியும் இல்லை.மக்களுடைய வாக்குகளை தனித்து பெற்றுக்கொள்ள முடியாத இவர்கள் இது போன்ற கீழ்த்தரமான கருத்துக்களைத் தான் முன்வைக்க முடியும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.