ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு மரண தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு!!

377

Court

நுவரெலியா மேல் நீதிமன்றம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற நீண்ட நாள் வழக்கு விசாரணையை அடுத்து இந்த உத்தரவு பிறக்கப்பிட்டுள்ளது.

நுவரெலியா வென்ச்சர் தோட்டத்தை சேர்ந்த பெரியசாமி சண்முகநாதன் எனும் நபரை தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் குறித்த 7 நபர்களுக்கு எதிராக மூன்று குற்றபத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

முதலாவது குற்றசாட்டிற்காக இந்த 7 பேருக்கும் தலா 3,000 ரூபா அபராதமும், 6 மாத சிறைத்தண்டனையை விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க, மூன்றாவது குற்றச்சாட்டிற்காக இவர்களுக்கு மரண தண்டனையை விதித்துள்ளார்