அஸ்ஸாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொலை!!

441

Asam

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக ”தி ஹிந்து” செய்தி வெளியிட்டுள்ளது.

அஸ்ஸாமின் கோக்ரஜஹார் மாவட்டத்தில் தினியாலியிலுள்ள சந்தைப் பகுதியில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து, சந்தைப் பகுதிக்கு அண்மையில் இருந்த இராணுவ ரோந்துப் படையினர் குறித்த பகுதியை சுற்றிவளைத்து எதிர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக ”தி ஹிந்து” செய்தியில் குறிப்பிப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை.

இருப்பினும், போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (சோங்பிஜித்) பிரிவைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.