வவுனியா ஒமந்தையில் சிவில் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று (06.08.2016) காலை 10.30 மணியளவில் ஒமந்தை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் வன்னி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன், புளியங்குளம் உதவிபொலிஸ் அத்தியட்சகர் வெல்கம, ஒமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் குமார ஆரியதாச, ஒமந்தை பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஒமந்தை சிவில் பாதுகாப்புக்குழு அங்கத்தவர்கள், கிராம சேவையாளர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போது பிரதி பொலிஸ்மாஅதிபர், புளியங்குளம் உதவி பொலிஸ் அத்தியட்சகர், ஒமந்தை பொலிஸ் பொறுப்பதிகாரிஅவர்களுக்கு மக்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இந் நிகழ்வில் உரையாற்றிய வன்னி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்,
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதையும் அவ்வாறு வேலைக்கு அமர்த்துவர்களுக்கு கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.