சவுதி இளவரசியின் 160 கோடி பெறுமதியான கைக்கடிகாரம் பிரான்ஸில் கொள்ளை!!

607

Watch

பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா வந்த சவுதி அரேபியா நாட்டு இளவரசியின் கைக்கடிகாரத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.  இதுதொடர்பாக, அந்நாட்டு ஊடகங்களின் வெளியான செய்திகளின்படி,

பாரிஸ் நகரின் மத்திய பகுதியில் தன்னை வழிமறித்த ஆயுதமேந்திய மர்ம நபர்கள் சுமார் 11 லட்சம் டொலர் (இலங்கை மதிப்புக்கு சுமார் 160 கோடி ரூபாய்) மதிப்புள்ள கைக்கடிகாரத்தை பறித்துச் சென்றதாக சவுதி நாட்டு இளவரசி பொலிசில் புகார் அளித்துள்ளதாகவும், இதுதொடர்பாக, பொலிசார் விசாரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.