உயர்தரப் பரீட்சையில் மோசடி செய்பவர்களின் பெயர் தடை செய்யப்பட்டோர் பட்டியலில்!!

327

AL

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடி செய்பவர்களின் பெயர்களை, தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் தடை செய்யப்பட்ட உபகரணங்களை பரீ்ட்சை நிலையத்திற்கு கொண்டு செல்லும் மாணவர்களுக்கு 5 வருட பரீட்சை தடைகளும் விதிக்கப்படவுள்ளதாக பரீ்ட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டாம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சையில் இதுவரை 40 முறைப்பாடுகள் இடம்பெற்றுள்ளமை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பரீ்ட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

இந்த முறைப்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.