யாழில் கோயிலுக்கு அருகில் அட்டைப் பெட்டியில் இருந்து பச்சிளம் குழந்தை மீட்பு!!

541

Baby

யாழ்ப்பாணம் – இளவாளை – வடலியடப்பு பகுதியில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

பிறந்து 10 நாட்களேயான குறித்த ஆண் குழந்தை பெட்டி ஒன்றில் இடப்பட்டு, வடலியடப்பு பகுதி கோயிலுக்கு அருகில் கிடத்தப்பட்டிருந்த நிலையில், பொது மக்கள் அதனை மீட்டு, இளவாழை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் அந்த சிசு தௌ்ளிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டு, தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை இளவாளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.