இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுயில் ரயில் விபத்துக்களினால் 250 பேர் உயிரிழப்பு!!

312

Train Accident Srilanka

வருடத்தின் இதுவரையான காலப்பகுயில் ரயிலில் மோதுண்டு 250 பேர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் அதிகமானோர் தற்கொலை செய்துக் கொண்டவர்கள் என ரயில்வே பாதுகாப்பு அத்தியட்சகர் அநுர பிரேமரத்தன தெரிவித்தார்.

மேலும் சமிஞ்சை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள ரயில் கடவைப் பகுதிகளிலும் அதிகமான விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் ரயில் விபத்துக்களை தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்பு அத்தியட்சகர் அநுர பிரேமரத்தன குறிப்பிட்டார்.