இலங்கையில் 2009ம் ஆண்டு நடந்த போரின் போது தமிழர்கள் பலர் இராணுவத்திடம் தஞ்சம் அடைந்தனர். தஞ்சம் அடைந்தவர்களில் 104 பேர் மர்மமான முறையில் இறந்தனர். இதுகுறித்து சர்வதேச அளவில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை நேற்று காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு அமைப்பின் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இலங்கை தூதரகத்துக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டு அருகே இருந்த மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
-தி ஹிந்து-