கைபேசி, டெப் உட்பட 2 கோடி பெறுமதியுடைய பொருட்களுடன் விமான நிலையத்தில் நால்வர் கைது!!

734

Airport

வரி ஏய்ப்புச் செய்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படும், இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்களுடன் நால்வர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரின் கோனஹேன முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் பிரதான வௌியேறும் வாயிலில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

இதேவேளை, சந்தேகநபர்கள் வசமிருந்து, வரி ஏய்ப்பு செய்து நாட்டுக்குள் எடுத்து வரப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள், 2309 டெப்கள், ஒரு தொகை சிகரெட்டுக்கள் உட்பட பல பொருட்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றின் பெறுமதி இரணடு கோடியே 34 இலட்சத்து 33,978 ரூபாய் என பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கைதுசெய்யப்பட்ட நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக, சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, சுங்க அதிகாரிகளால், சந்தேகநபர்களுக்கு 21 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.