அனுராதபுரம் நகரில் பகுதி நேர வகுப்புச் சென்ற 12 வயதான மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக கூறப்படும் ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
44 வயதான இந்த ஆசிரியர் அனுராதபுரம் நகரில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் சேவையாற்றி வருகிறார். ஆசிரியர் தன்னை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியமை குறித்து மாணவி அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
திருமணமான இந்த ஆசிரியருக்கு இரண்டு புதல்விகள் இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் இன்று அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.






