கனடாவில் வசிக்கும் ராம் சிவாவின் ராம் பவுண்டேசன் மூலம் கொழும்பு தேசிய அரச வைத்தியசாலைக்கு மாதாந்தம் கிளினிக் செல்ல கூட வசதி இல்லாத 4 பேருக்கு போக்குவரத்துச் செலவு, தங்குமிட, உணவுத் தேவைக்கான மாதாந்த பண உதவியின் முதல் மாத கொடுப்பனவு நேற்று முன்தினம் (05.08.2016) வவுனியா மாவட்ட சமூக சேவை திணைக்களத்தில் வைத்து தமிழ் விருட்சம் அமைப்பால் வழங்கி வைக்கப்பட்டது.
இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு கொழும்புக்கு சிகிச்சைக்கு சென்று வரும் மன்னார் உப்புக்குளத்தில் வசிக்கும் பசுபதி வேல்முருகு அவர்களுக்கும், இதயப் பிரச்சனை சம்மந்தமான சிகிச்சைக்கு கொழும்பு செல்லும் 1 ம் வட்டாரம் கைவேலி புதுக்குடியிருப்பு முல்லைதீவில் வசிக்கும் செல்லத்துரை தயாபரனுக்கும், வவுனியாவில் வசிக்கும் சுவாசக்குழாய் பிரச்சனை சம்மந்தமாக கொழும்பு சென்று வரும் 2 வயதுக் குழந்தை ஸ்டிபினிக்கும்,
வவுனியாவில் வசிக்கும் சிறுநீரக பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு சென்று வரும் 7 வயதுக் குழந்தை திசாலினிக்கும் இந்த மாதாந்த கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், சமூக சேவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் தவீசன், வசந்தன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ), செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.















