8 நிமிடங்களுக்குள் கொடியைப் பார்த்து 224 நாடுகளின் பெயரைச் சொல்லும் 3 வயதுக் குழந்தை!!

761

Baby

ஒரு பச்சிளம் குழந்தை கொடியைப் பார்த்து நாட்டின் பெயரை பளிச் பளிச் என்று சொல்லுகிறது என்றால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா? அக் குழந்தையின் பெயர் லஸ்யபிரியா.3 வயதை எட்டி பிடிக்க இன்னும் 1 மாதம் இருக்கின்றது.

இந்திய தேசியக் கொடியில் மேற்பகுதியில் சிவப்பு வருமா? பச்சை வருமா? என்று அடிக்கடி குழப்பம் வந்துவிடும். இத்தனைக்கும் 1ம் வகுப்பு முதல் தேசிய கொடியின் கீழ் நின்று தாயின் மணிக்கொடி பாரீர்… என்று தினமும் பாடியவர்கள் தான்.

ஆனால் ஒரு பச்சிளம் குழந்தை 224 நாடுகளின் கொடியை பார்த்து நாட்டின் பெயரை பளிச் பளிச் என்று சொல்லுகிறது என்றால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா?

அந்த குழந்தையின் பெயர் லஸ்யபிரியா. 3 வயதை எட்டி பிடிக்க இன்னும் 1 மாதம் இருக்கிறது. இந்த லஸ்ய பிரியா உண்மையிலேயே அதிசய பிரியா தான்.

சென்னை பெரவள்ளூர் சக்திவேல் நகரில் வசிக்கும் லஸ்யபிரியாவின் பெற்றோர் சந்தோஷ்- சாதனாவின் லட்சியம் எப்படியாவது தன் பிள்ளையை கின்னஸ் சாதனைக்கு தயார்படுத்த வேண்டும் என்பது தான்.

அதன் காரணமாகவே கெமிக்கல் என்ஜினீயரிங் முடித்துவிட்டு குடும்பத் தலைவியாக இருக்கும் சாதனா தனது குழந்தைக்கு பயிற்சி அளிப்பதிலேயே பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்.

கொடிகள் மீதான நாட்டத்தை புரிந்து கொண்டு 255 நாடுகளின் கொடிகளையும் சேகரித்தனர். ஒவ்வொரு கொடியையும் காட்டி அந்த நாட்டின் பெயரை சொல்லி கொடுத்திருக்கிறார்கள்.

இவ்வாறு தினம் 5 கொடிகள் வீதம் பயிற்சி அளித்துள்ளனர். இப்போது 224 நாடுகளின் கொடிகளை பார்த்து அந்த நாட்டின் பெயரை கட கட வென்று சொல்லிவிடுகிறார்.

குழப்பிக் கேட்டாலும் அவர் எந்தக் குழப்பமும் இல்லாமல் கொடியை பார்த்து சட்டென்று சொல்லிவிடுகிறார். 8 நிமிடத்தில் 224 நாடுகளையும் சொல்லிவிடுகிறார்.

இன்னும் மழலை சொல் மாறாத பேச்சு. அவருக்கே உரித்தான அந்த மொழியில் தான் நாடுகளின் பெயர்களை சொல்கிறார்.

மீதி 31 நாடுகளின் பெயர்கள் பெரியவர்கள் வாயில் கூட நுழையாத கடினமான பெயர்கள். எனவே அந்த பெயர்களை பிரியாவால் சொல்ல முடியவில்லை.

5 வயதுச் சிறுவன் 5 நிமிடங்களில் 221 நாடுகளின் பெயரைச் சொன்னதுதான் இதுவரை சாதனையாக இருக்கின்றது. எங்கள் பிரியாவுக்கு 3 வயதுதான் ஆகின்றது. ஆனால் 224 நாடுகளின் பெயர்களை சொல்கிறார். எப்படியாவது அவர் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை.

இது மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள 30 மாநிலங்களின் தலைநகரங்களையும் பிரியா சொல்கிறார் என்றார்.

குழந்தைகளுக்கு ஞாபக சக்தியும், அறிவாற்றலும் அதிகம் என்பார்கள். லஸ்யபிரியாவும் அதை நிரூபித்து வருகின்றார்.