வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டப் பகுதியில் தீப் பரவல்!!

692

 
வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டப் பகுதியில் இன்று (07.08.2016) பிற்பகல் 2.30 மணியளவில் ஆட்கள் குடியற்ற வீட்டுப் பகுதியில் தீப் பரவல் ஏற்பட்டு பல வீடுகளில் தீ பரவியுள்ளது.

ஓமந்தை பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, உடனடியாக தண்ணீர்த் தாங்கியுடன் அங்கு சென்ற பொலிஸ் குழுவினர் அப்பகுதியில் பரவியுள்ள தீயினை கட்டுப்படுத்தியுள்ளனர்.

இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இனத்தெரியாதவர் ஒருவர் வைத்த தீ காற்றில் பரவி காய்ந்திருந்த புற்கள் பற்றி குடியில்லா பகுதியிலுள்ள வீடுகளிலுள்ள புற்கள், வாழைகள், தென்னை மரங்கள் என்பன தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1 13933187_508890165970970_759885620_n 13936666_508890075970979_435610866_n 13936743_508890125970974_1014589557_n 13936744_508890079304312_2000298487_n