வவுனியா குருமன்காட்டில் திருட்டு!!

593

 
வவுனியா குருமன்காட்டிலுள்ள வீடொன்றில் நேற்று (07.08.2016) இரவு திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா குருமன்காடு நான்காம் ஒழுங்கையிலுள்ள வீடொன்றில் நேற்று (07.08.2016) இரவு 9.00 மணியவில் திருட்டுச் சம்பமொன்று இடம்பெற்றுள்ளது.

வீட்டில் யாருமில்லாத சமயத்தில் திருடங்கள் வீட்டினுள் புகுந்து தங்க நகைகளை களவாடிச் சென்றுள்ளனர்.

களவாடபட்ட வீட்டின் முன்புறமாக இரவுவேளை இருபெண்கள் உட்பட மூவர் சந்தேகத்திற்கிடமாக அவ்விடத்தில் நின்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

1 02 news (1) news (2)