யாழ்ப்பாணம் இளவாழை வடலியடப்புப் பகுதியில் கோயிலொன்றுக்கு அருகில் காட்போர்ட் பெட்டிக்குள் இருந்து மீட்கப்பட்ட சிசுவை நீதவானிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ். சிறுவர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த சிசுவை இன்று முன்னிலைப்படுத்தி, குழந்தைகள் காப்பகத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சிசு தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ளதோடு குறித்த சிசு தேகாரோக்கியத்துடன் காணப்படுவதாகவும் பொலிஸார் கூறினர். எனினும் குழந்தையின் தாய் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
எவ்வாறாயினும் சிசுவின் தாய் தூரப் பிரதேசத்தை சேர்ந்தவராக இருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகம் வெயியிட்டுள்ளனர்.
பிறந்து 10 தொடக்கம் 15 நாட்களேயான ஆண் சிசுவே நேற்று காலை உயிருடன் மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் இளவாழை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








