பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கி உள்ளது. இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த விண்கலம் செவ்வாயில் தரையிறங்கியது.
கியூரியாசிட்டி விண்கலம் இதுவரை 13.5 கிலோ மீட்டர்கள் தூரம் பயணித்துள்ளது சுமார் 128,000 புகைப்படங்களையும் பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.
இது தவிர 362,000 தடவைகள் லேசர் கதிரை பாய்ச்சி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது, கியூரியாசிட்டி விண்கலம் அனுப்பப்பட்டு வருடத்துடன் 4 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன.
இதனைக் கொண்டாடும் வகையில் மார்ஸ் ரோவர் (Mars rover) எனும் ஒன்லைன் வீடியோ கேமினை நாசா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
முற்றிலும் இலவசமாக கிடைக்கக்கூடி இந்த கேமை ஒன்லைனில் மட்டுமன்றி அப்பிள் மற்றும் அன்ட்ரோயிட் சாதனங்களிலும் நிறுவி பயன்படுத்த முடியும்.
இதேவேளை 2020 ஆம் ஆண்டில் கியூரியோசிட்டி ரோவர் 2 எனும் மற்றுமொரு விண்கலத்தினை செவ்வாய் கிரகம் நோக்கி அனுப்பவுள்ளதாக புதிய தகவலையும் நாசா வெளியிட்டுள்ளது.