மகாராஷ்டிரா மாநிலம் ஒஸ்மனாபாத்தில் பொலிஸ் துணை ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கி முனையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரை அடுத்து, சாங்லி மாவட்டம், விஷ்ரம்பாக் பொலிஸ் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றி வரும் 26 வயதான பிரேம் சுக்தேவ் பான்சோடை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பிரேம் சுக்தேவ்வுக்கு சொந்தமான வீட்டில் பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்துள்ளார்.
சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பிரேம சுக்தேவ் துப்பாக்கியை காட்டி மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
மேலும், சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என பிரேம் சுக்தேவ் பான்சோடு மிரட்டியதாக குடும்பத்தினர் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள பிரேம் பிரேம் சுக்தேவ் பான்சோடு மீது இந்திய தண்டனைச் சட்டம் 376ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.






