பெண் சுட்டுக் கொலை!!

495

1 (58)

வெலிஅத்த பகுதியில் 40 வயதான பெண்ணொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இசுருபுர – லங்கானந்த மாவத்தை பகுதி வீடொன்றில் இருந்த பெண்ணே இன்று காலை இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, காயமடைந்த அவர், வெலிஅத்த – ஹத்போதிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னரே பலியாகியுள்ளார். காணிப் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடே துப்பாக்கிப் பிரயோகத்திற்கு காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இது குறித்த மேலதிக விசாரணைகளை வெலிஅத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.